districts

இருளர் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை முக்கிய குற்றவாளி படூர் பாலு கைது

செங்கல்பட்டு, ஜூலை15-

    பழங்குடியின பெண்களை பாலி யல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய படூர் பாலு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

   தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஜனநாயக மாதர் சங்கத்தின் தொடர் சட்டப் போராட்டத்தையடுத்து காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.  

   செங்கல்பட்டு மாவட்டத்தில் கேளம்பாக்கத்தை அடுத்த தையூர் - கோமா நகரில் மர  வியாபாரி படூர் பாலு-விடம் கொத்தடி மைகளாக இருந்த பழங்குடி சமூகத்தை சேர்ந்த 10 ஆண்கள், 10  பெண்கள் ஏப்.28 அன்று மீட்கப்பட்டனர்.

   இதில்  22 வயதுள்ள பெண், தன்னை படூர் பாலு பாலியல் வல்லு றவு  செய்ததாக ஜூன் 6 அன்று புகார் அளித்தார். மேலும் 5 பெண்கள் ஜூன் 23 அன்று கேளம்பாக்கம் காவல் நிலை யத்தில் பதிவு தபால் வாயிலாக புகார் அனுப்பினர். இதையடுத்து  காவல்துறை வழக்கு பதிவு செய்து, பாதிக்கப் பட்டவர்களிடம் இருந்து 325 வாக்கு  மூலங்களை பெற்றது. இருப்பினும் பாலு கைது செய்யப்படவில்லை.

     இதுதொடர்பாக தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜை கடந்தவாரம்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, செயற்குழு உறுப்பினர்கள் சேஷாத்திரி, தமிழரசி,  ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.ஜெயந்தி,  தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செய லாளர் க.புருஷோத்தமன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் சுப்பிரமணி மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் சந்தித்து முறையிட்டனர்.  

    இந்நிலையில் பழங்குடியின மக்களை கொத்தடிமையாக வைத்தி ருந்தது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்தது கொலை வெறி தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பாலுமீது  வழக்கு பதிவு செய்யப் பட்டு சனிக்கிழமை (ஜூலை 15) கைது செய்து செங்கல்பட்டு குற்ற வியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.