districts

img

மழைநீர் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை: மேயர் பிரியா

சென்னை,மார்ச் 29- சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவ தாக மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தெரி வித்துள்ளார். சென்னை  கண்ணகி நகர் பகுதியில் உள்ள  தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளை அழகு படுத்தும் விதமாக, சென்னை மாநகராட்சி மற்றும் எஸ்.டி.ஆர்ட் இந்திய நிறுவனம் இணைந்து வரைந்த சுவர் ஓவியத்தை சென்னை மேயர் பிரியா ராஜன் திங்களன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், ‘‘தமிழ்நாடு நகர்புற வாழ்விட  மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பு களில் சுவர் ஓவியங்கள் சிறப்பாக வரையப்பட்டுள்ளன. இந்த வண்ணம் தீட்டும் பணி தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்படும். மழைநீர் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  அவர் கூறினார்.