சென்னை, பிப். 18- வடசென்னை மாவட்டத்திற்கு தனி நல வாரிய அலுவலகம் அமைக்க வேண்டும் என தையல் சங்க மாநாடு வலியுறுத்தி யுள்ளது. சென்னை பெருநகர தையல் தொழி லாளர் சங்கத்தின் வடசென்னை மாவட்ட 15ஆவது மாநாடு ஞாயிறன்று (பிப். 18) அம்பத்தூரில் தோழர்.பி.என். உண்ணி நினைவரங்கில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் பி.கோவிந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் என்.நாராயணன் சங்க கொடியை ஏற்றினார். மாவட்ட துணைத் தலைவர் டி.ராமமூர்த்தி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் மா.பூபாலன் மாநாட்டை துவக்கி வைத்தார். செய லாளர் ஜி.குணசேகரன் வேலை அறிக்கை யையும், ஆர்.மணிமேகலை வரவு,செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். தையல் சம்மேளனத் தலைவர் பி.சுந்தரம் வாழ்த்திப் பேசினார். மாவட்டச் செயலாளர் சு.லெனின் சுந்தர் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக அம்பத்தூர் பகுதி தலைவர் டி.கே.சம்பத் ராவ் வர வேற்றார். துணைத் தலைவர் எஸ்.வேலு நன்றி கூறினார். தீர்மானங்கள் தையல் தொழிலாளர்கள் நல வாரி யத்திற்கு தனி நிதியம் உருவாக்க வேண்டும், வேலை வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் தையல் கடை களுக்கு உரிமம் பெற வேண்டும் என்று நிர்பந்திக்கக்கூடாது, வடசென்னை மாவட்டத்திற்கு தனி நலவாரிய அலுவ லகம் அமைக்க வேண்டும், தமிழக அரசால் நடத்தப்படும் இலவச பள்ளி சீருடை தைக்கும் பெண் தையல் தொழி லாளர்களுக்கு பாரபட்சமின்றி அனை வருக்கும் துணிகள் வழங்க வேண்டும், சிக்கன சேமிப்பு கணக்கை வெளிப்படைத் தன்மையாக பாஸ் புத்தகத்தில் எழுத வேண்டும், காணாமல் போன தையல் தொழிலாளர்களின் கோப்புகள் கிடைக்கும் வரை நேரடியாக பதிவை ஏற்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் மாவட்டத் தலைவராக பி.கோவிந்த சாமி, செயலாளராக ஜி.குணசேகர், பொருளாளராக ஆர்.மணிமேகலை உள்ளிட்ட 24 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.