districts

img

போலி உரம் தயாரித்து விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவிச வலியுறுத்தல்

கடலூர்,அக்.2 – கடலூர் மாவட்டத்தில் போலி உரம் தயாரித்து விற்பனை செய்ப வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு மென விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது.  கடலூர் மாவட்டத்தில் போலி உரம்  தயாரித்து விவசாயிகளை ஏமாற்றும் நபர்களை கைது செய்ய வேண்டும், போலி உர தொழிற்சாலையை முற்றி லும்  தடை செய்ய வேண்டும், போலி உர தொழிற்சாலை விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை வேண்டும், பயிர் காப்பீடு செய்து  பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயி களுக்கும் பாரபட்சமின்றி இழப்பீடு தொகை வழங்க வேண்டும், நெல்  கொள் முதல் நிலையங்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தியும், ஒன்றிய மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலா ளர் எஸ். துரைராஜ், மாவட்டச் செயலா ளர் ஆர்.கே. சரவணன், மாவட்ட பொரு ளாளர் ஆர். ராமச்சந்திரன், மாவட்ட  துணைத் தலைவர் எஸ். தட்சிணா மூர்த்தி, மற்றும் நிர்வாகிகள் ஆர்.லட்சுமி, ஆர்.லோகநாதன், பி. கற்பனைச் செல்வன், கே. செல்வ குமார், ஆர். மகாலிங்கம், பி.குமர குருபரன் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்திற்கு முறையாக அனுமதி அளித்திருந்தும், சம்பவ  இடத்திற்கு வந்த துணை காவல்  கண்காணிப்பாளர் ரூபன் குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்றும், ஆர்ப்பாட்டம்  நடத்தினால் கைது செய்வோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இணை அடுத்து விவசாய சங்க தலைவர்கள் காவல்துறை கண்காணிப்பாளரிடம் பேசியதன் அடிப்படையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.