districts

img

சீனியர் ஆண்கள் வாலிபால் போட்டி: ஐசிஎப் அணிக்கு கோப்பை

திருத்தணி, நவ.28- திருவள்ளூர் மாவட்ட வாலிபால் கழகம் சார்பில்  வடக்கு மண்டல அளவி லான சீனியர் ஆண்கள் வாலிபால் போட்டிகள் திருத்தணியில் தளபதி கே. விநாயகம் மகளிர் கலை  மற்றும் அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டிகளில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை , கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இருந்து அணிகள் கலந்து கொண்டன.  மாவட்ட வாலிபால் அசோசிஷியன் சங்க செயலாளர் குப்புசாமி தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற ஐசிஎப் அணிக்கு திருத்தணி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் கோப்பை வழங்கி னார். 2ஆவது, 3ஆவது இடங் களை பெற்ற எஸ்ஆர்எம் அணிக்கும்  ராணிப்பேட்டை தேசிங்கு அணிக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.