புதுச்சேரி, மே.2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மூத்த தோழர் கே.ராஜமாணிக்கம் (வயது -75) காலமானார். புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட தோழர்.கே.ராஜமாணிக்கம், ஏ.எப்.டி பஞ்சாலையில் பணியாற்றி ஓய்வூ பெற்ற வர் ஆவார். தலைமறைவு காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் என்னற்ற தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்தவர். இவரது மனைவி விஐயா மாதர் சங்கத்தின் புதுச்சேரி தலைவராகவும், போராளியாகவும் திகழ்ந்து சில ஆண்டு களுக்கு முன்பு காலமாகிவிட்டார். தோழர் ராஜமாணிக்கம் வயது முதிர்ந்தாலும் மார்க்சிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்காக அயராது பாடுப்பட்டவர். இவரது மகன் ஜோதிபாசு சிஐடியு புதுச்சேரி தனி யார் போக்குவரத்து சங்கத்தில் மாநில நிர்வாகியாக பொறுப்பு வகித்து வருகிறார். ஜி.ராமகிருஷ்ணன் நேரில் அஞ்சலி புதுச்சேரி பேருந்து நிலையம் எதிரில் உள்ள பெரியார் நகர் 8வது குக்கு தெருவில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தோழர் ராஜமாணிக்கத்தின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வியாழக்கிழமை (மே-2) நேரில் சென்று மலரஞ்சலி செலுத்தி னார். பின்னர் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். புதுச்சேரி செயலாளர் ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் சுதா, கலிய மூர்த்தி,சிபிஎம் நகர கமிட்டி செயலாளர் மதிவாணன்,மாநிலக்குழு உறுப்பினர் பிரேமதாசன்,அலுவலக செயலாளர் ஜோதிபாசு, மூத்த தோழர்கள் வி.ராம கிருஷ்ணன்,குணசேகரன் உள்ளிட்ட திரளானோர் அன்னாரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.பின்னர் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்கள்.