districts

img

மூத்த தோழர் எம்.புருஷோத்தமன் காலமானார்

சென்னை, ஏப். 26- மணலி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி  தோழர் எம்.புருஷோத்தமன் (57) வியாழனன்று காலமானார். இவர் மாதவரம் பால் பண்ணையில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது 1980 ஆம் ஆண்டு தன்னை இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்திலும்  பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியிலும் இணைத்துக்கொண்டு களப்பணியாற்றினார். இவர் மணலி பகுதியில் வாலிபர்களை திரட்டுவதில் பெரும் பங்காற்றியவர். தனது இறுதி மூச்சு வரை அந்த பகுதி மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தவர். மே தினத்தை முன்னிட்டு பெரியத்தோப்பில் உள்ள  கொடிக்கம்பத்திற்கு வர்ணம் பூசி விட்டு ஓய்வெடுக்கும்போது அவருக்கு  மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு சாந்தி என்ற மனைவியும் சுர்ஜித் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவரது உடலுக்கு கட்சி யின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல். சுந்தரராஜன், மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராம கிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ராணி, மணலி பகுதிச் செய லாளர் டி.பாபு, நிர்வாகிகள் முருகன், சிட்டிபாபு, துரை ராஜ், நீலவேணி, பத்ம நாபன், ரவிச்சந்திரன், தியாக ராஜன் உள்ளிட்ட ஏராளமா னோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி னர். அவரது உடல் வெள்ளி யன்று (ஏப். 26) பிற்பகல் பெரியதோப்பு சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.