districts

img

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக செங்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக செங்கம் அருகே அமைந்துள்ள 119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணையில் தற்போது 117 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது.  7,321 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில், தற்போது 6875 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1190 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து 1710 மில்லியன் கன அடி உபரி நீர்  வெளியேற்றப்படுகிறது.