சென்னை, செப்.15- சென்னை வடபழனியில் உள்ள எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின், மின்னனு மற்றும் தொடர்பியல் துறை சார்பில் ஆரம்ப்’23 என்னும் தொழில்முனைவோர்க்கான கருத்தரங்கு மற்றும் மாநாடு துவக்க விழா புதன்கிழமை (செப்,13) நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக ஸ்ஆட்அப் டேல்ஸ், சிங்கப்பூர் நிறுவனர் கிருஷ்ணமணி கண்ணன் பேசுகையில், சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் இளம் தொழில்முனைவோர், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் உள்ள ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், தொழில் வாய்ப்புகள்குறித்து விரிவாக விளக்கினார். கருடா ஏரோஸ்பேஸ் இந்தியா தலைமை வளர்ச்சி அதிகாரி மது ஆகியோர் கலந்து கொண்டனர். இசிஇ துறை தலைவர் ஷெர்லி எட்வார்ட் வரவேற்றுபேசினார். முன்னதாக வடபழநி வளாக முதல்வர் முனைவர் சி வி ஜெயக்குமார் மற்றும் துணை முதல்வர் முனைவர். சி கோமதி, விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினர். விவாத நிகழ்ச்சியை ஸ்ரீராம் செல்வன் நடத்தினார். தற்கால தொழில் முனைவோர் தங்களை எப்படி தயார் செய்வது - என்னும் தலைப்பில் வழிநடத்தினார். தீபக் குமார், திரு.அருண் குமார் மற்றும் திரு.சுதர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இவ்விழாவில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 200 மேற்பட்ட மாணவர் கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.