districts

img

புதுவையில் 47 பண்டக காப்பாளர்கள் தேர்வு

புதுச்சேரி,ஜன. 12- புதுச்சேரி அரசு துறை களுக்கு பண்டக காப்பாளர் நிலை 3 பணிக்கான எழுத்துத் தேர்வு  நடை பெற்றது. தேர்வில் வெற்றி  பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (ஜன.12) நடைபெற்றது. இதில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு தேர்வான 47 நபர்களுக்கு பணி ஆணை  வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர்   செல்வம், பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள், அரசு  அதிகாரிகள் கலந்து கொண்டனர்.