districts

img

திருவள்ளூரில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 18 ஆய்வு கட்டுரைகள் தேர்வு

திருவள்ளூர், அக்.29- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திரு வள்ளூர் மாவட்டம் ஒருங்கிணைக்கும் 31வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு சனிக்கிழமையன்று (அக் 28) திரு நின்றவூர் ஜெயா கலை மற்றும் அறிவியல்  கல்லூரியில் நடைபெற்றது. மாநாட்டின் கருப்பொருளாக ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்கான சுற்றுச்சூழலை புரிந்துகொள்வது" என்ற தலைப்பில் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும்  26 அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து 208 ஆய்வுகள் சமர்பிக்கப்பட்டது. இதில் சுமார் 400 மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்வில் ஆய்வுகளை பார்வையிட்ட ஜெயா கல்வி குழுமத்தின் இயக்குநர் பேராசிரியர் ஏ.கனகராஜ் மாணவர்கள் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். மாவட்ட மாநாட்டில் சமர்பிக்கப்பட்ட ஆய்வு கட்டுரைகளில்,  18 ஆய்வு கள் சிறந்த ஆய்வுகள் என தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மருத்துவர் அனுரத்னா, டிரீம் கிட்ஸ் பவுண்டேசன் நிறுவனர் நந்த குமார், முனைவர் விஜயரங்கன், மாவட்ட செயலாளர் எஸ்.மோசஸ்பிரபு, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சாந்தகுமாரி, பி.ஜெயநாராயணன்,பொன்னேரி அரசு கல்லூரியின் பேராசிரியர் ராஜ குரு, சண்முக சுந்தரம்ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினர்.  நிகழ்ச்சிக்கு என்சிஎஸ்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் தாளமுத்து நடராசன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட துணைத் தலைவர் தேவராஜ் நன்றி கூறினார்.