districts

கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் கலந்த 400 கிலோ பச்சை பட்டாணி பறிமுதல்

சென்னை, ஜன. 31- கோயம்பேடு காய்கறி மார்க் கெட்டில் பச்சை பட்டாணி, பட்டர்  பீன்ஸ் ஆகியவற்றில் வியாபாரி கள் சிலர் தடை செய்யப்பட்ட ரசாய னம் தெளித்து நிறமேற்றி விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டில் திங்களன்று மாவட்ட உணவு  பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர்  சதீஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் சுந்தரமூர்த்தி, அங்காடி நிர்வாக குழு அதிகாரி கள் சோதனை நடத்தினர். சுமார் 100க்கும் மேற்பட்ட கடை களில் நடத்தப்பட்ட சோதனையில் பச்சை பட்டாணி, பட்டர் பீன்ஸ் மற்றும் கலர் அப்பளங்கள் நிறத் திற்காக ரசாயனம் கலந்து விற்பனை செய்யப்படுவது தெரி யவந்தது. இதையடுத்து கடைக ளில் விற்பனைக்காக வைக்கப் பட்டு இருந்த ரசாயனம் கலந்த  400 கிலோ பச்சை பட்டாணி, 50  கிலோ பட்டர் பீன்ஸ் மற்றும் 100 கிலோ கலர் அப்பளம் ஆகிய வற்றை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோல் ஒரு  கடையில் சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட குட்கா,  புகையிலையும் சிக்கியது. இதை யடுத்து அந்த வியாபாரிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.