சென்னை, ஆக. 17-
மூலக்கொத்தளம் பகுதியில் அரசுக்கு சொந்த மான ரூ70 கோடி மதிப்பி லான நிலத்தை மீட்ட அதி காரிகள், அங்கு இயங்கி வந்த தனியார் நிறுவனத் திற்கு சீல் வைத்தனர்.
மூலக்கொத்தளம் காட்பாடா பிரதான சாலை யில் கோபால் நாயக்கர் அன் சன்ஸ் என்ற தனியார் நிறுவனம் 2.5 ஏக்கரில் கடந்த 130 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. அதன் மதிப்பு ரூ70 கோடி ஆகும். இந்த நிறுவனத்தில் டிராக்டர் உதிரி பாகம் தயாரிக்கப்படுகிறது. இங்கு 170க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள்.
குத்தகை முடிந்த காரணத்தால் அரசு சார்பில் அந்த இடத்தை திருப்பித் தரவேண்டும் என்று கேட்கப் பட்டது. இதனையடுத்து நிறுவனத்தின் உரிமை யாளர்கள் ஹரி கிருஷ்ணன், சீனிவாசன், பாஸ்கர் ஆகி யோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கின் தீர்ப்பு அரசுக்கு சாதகமாக வந்தது. அந்த நிறுவனம் இடத்தை காலி செய்து அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தர வில் கூறப்பட்டது.
அதன்பேரில் தண்டை யார்பேட்டை ஆர்டிஓ கியூரி, தண்டையார்பேட்டை தாசில்தார் தர்மராஜ் ஆகியோர் வண்ணாரப் பேட்டை காவல்துறையினர் உதவியுடன் நிறுவனத்தில் இருந்த தொழிலாளர்களை வெளியேற்றினர். பின்னர் நிறுவனத்திற்கு சீல் வைத்த னர். இதனால் அங்கு வேலை செய்த வட மாநிலத் தைச் சேர்ந்த 55 தொழி லாளர்கள் வேலைஇழந்து வெளியேறினர்.