கடலூர், ஏப்.3- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடலூர் மாவட்டம் சார்பாக பண்ருட்டி வட்டம், நடியப்பட்டு மற்றும் முடப்பள்ளி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில் பொது மக்கள் மற்றும் மாணவ மாணவிகள் முன்னிலையில் வானவியல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வை மாவட்டத் துணைத் தலைவர் பி.தன லட்சுமி வானியல் பற்றிய பல்வேறு கருத்துக்களை வழங்கினார். 100 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டு தொலைநோக்கி மூலம் கண்டுகளித்தனர். அமாவாசை, பவுர்ணமி எப்படி வருகிறது. பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைவெளி, நிலவில் நடை பெற்று வரும் அறிவியல் ஆராய்ச்சி போன்ற அறிவி யல் உண்மைகளை விளக்கி பேசினார்.