புதுச்சேரி, நவ.25 விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், விபா நிறுவனம், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் மற்றும் தேசிய அறிவியல் அருங்காட்சிய குழுமம் ஆகியன இணைந்து, பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை கடந்த அக்டோ பர் 29 மற்றும் 30 ஆகிய இரு தேதிகளில் இணைய வழியில் நடத்தியது. இளம் விஞ்ஞானி களைத் தேடும் இத்தேர்வு ஸ்மார்ட் போன், டேப்லெட், மடிக்கணினி மூலம் இத்தேர்வை எழுதினர். இதில் புதுவை காரைக்கால் மாஹே ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் 1800 மாணவர்கள் இந்த தேர்வினை எழுதினர். இதில் அனைத்துப் பள்ளி களில் இருந்தும் 130 மாண வர்கள் மாநில அளவிலான தேர்விற்கு தேர்ச்சி பெற்ற னர். தேர்வான மாணவர்கள் அறிவியல் விஞ்ஞானி களுடம் உரையாடுவதற்கும் அவர்களுடன் சில ஆராய்ச்சிகளில் ஈடுபடவும் உள்ளனர். அமலொற்பவம் மேனிலைப்பள்ளி, அம்ரிதா வித்யாலயம், புனித பேட்ரிக் மேனிலைப்பள்ளி, வாசவி மேனிலைப்பள்ளி, கேந்திரிய வித்யாலயா, சங்கரா வித்யாலயா, ஆதித்யா வித்யாஷ்ரமம், பெத்தி செமினார் பள்ளி, காரைக்கால் நவோதயா வித்யாலயா ஆகிய பள்ளி களில் இருந்து மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். இவர்கள் புதுச்சேரி மாநில அளவில் நடைபெறும் ஒரு நாள் மாபெரும் முகாமில் அறிவியலாளர்களுடன் சந்திப்பு, ஆராய்ச்சி நிறுவ னங்கள் பார்வையிடல் மற்றும் கருத்தாளர்கள் முகாமில் பங்கேற்க வாய்ப்புப் பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் மாநில அளவிலான முகாம் தேர்வு வரும் டிசம்பர் 10ம் தேதி புதுச்சேரியில் உள்ள ராஜீவ் காந்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் தேர்ச்சி பெறும் மாண வர்கள் தேசிய அளவிலான முகாமிற்கு தகுதி பெறு வார்கள். தேசிய அளவில் கலந்து கொள்பவர் களுக்குச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங் கப்படும். தேசிய அளவி லான முகாமில் நடை பெறும் பல்வேறு வகை யான அறிவியல் சார் நிகழ்வு களில் பங்கேற்பர் என்று தேர்வின் மாநில ஒருங்கி ணைப்பாளர்கள் அருண் நாகலிங்கம் மற்றும் மணி கண்டன் ஆகியோர் தெரிவித் துள்ளனர்.