districts

img

மிக்ஜம் புயல் மழை வெள்ளத்தை ஒட்டி கடந்த ஒரு வாரமாக பள்ளிகளுக்கு விடுமுறை

மிக்ஜம் புயல் மழை வெள்ளத்தை ஒட்டி கடந்த ஒரு வாரமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, மீண்டும் திங்கட்கிழமை (டிச.11) பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையடுத்து புயல் நிவாரண பணிகளின் ஒரு பகுதியாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருவொற்றியூர் 4ஆவது வார்டு எர்ணாவூரில் உள்ள அரசு பள்ளியின் அறைகளை, கழிவறைகளை தூய்மை செய்யும் பணியை ஞாயிறன்று (டிச. 10) மேற்கொண்டனர். இதில் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.பி.சரவணத்தமிழன், பகுதி செயலாளர் ஸ்டாலின், துணை செயலாளர் சே.புவியரசி, நிர்வாகிகள் ராஜ்குமார், அகல்யா, பிரபாகரன், பிரவீன், விக்கி, தரூன் அர்ஷத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.