இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இரவு பாடசாலை மற்றும் கட்டணமில்லா அரசு போட்டித் தேர்வு உதவி மையம் திறப்பு விழா வடசென்னை மாவட்டத் தலைவர் நித்யராஜ் தலைமையில் பெரம்பூர் வியாசர்பாடி யில் நடைபெற்றது. திரைப்பட கலைஞர் மற்றும் இயக்குனர் மதன் குமார் அலுவலகத்தை திறந்து வைத்தார். வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் அபிராமி, மாவட்டப் பொருளாளர் விஜய், நிர்வாகிகள் ஸ்டாலின், முருகேசன், சுரேஷ், நீதிதேவன், கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.