கிருஷ்ணகிரி மாவட்டம், அரசு உதவி பெறும் அக்ஸிலியம் மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு ஐவிடிபி தொண்டு நிறுவனம் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. கல்லூரி மாணவிகள் பெற்றோரில் ஒருவரை இழந்தவர்களுக்கு ரூ. 7,500, பெற்றோர் இருவரையும் இழந்தவர்களுக்கு ரூ. 10,000 வீதம் 108 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் ரூ. 1000 மதிப்பில் புத்தகங்களுடன் வழங்கப்பட்டது. மொத்தம் ரூ. 9.8 லட்சம் மதிப்பிலான இந்த உதவிகளை ஐவிடிபி தொண்டு நிறு வன தலைவர் பிரான்சிஸ் வழங்கினார்.