கறவை மாடு பால் முகவர்களுக்கு காப்பீடு வழங்க ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கால்நடைகள் இழப்பால்பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படு கிறது. இதனால், சிறிய அளவில் பால் உற்பத்தி யாளர்கள், தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்படு கின்றனர். எனவே, கால்நடைகளுக்கான காப்பீடு திட்டத்தை, ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதில், பசு, எருமை, ஆடு, கோழிகள் உள்ளிட்டவற்றுக்கு காப்பீடு செய்யப்படுகின்றன. இந்நிலையில், கறவை மாடுகளுக்கு காப்பீடு வழங்க ஆவின் நிர்வாகம் திட்டமிட்டு, அதற்கான பணியை மேற்கொண்டு வருகிறது. காப்பீடு கட்டணமாக, ரூ.600 முதல் ரூ.700 வரை வசூல் செய்யப்படும். இதில், 25 விழுக்காடு மானியம் வழங்கப்படும். மானியத்தை ஒன்றிய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்கின்றன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கூடுதல் மானியம் வழங்கப்படும். நடப்பாண்டு, 50 விழுக்காடு கறவை மாடுகளுக்கு காப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது, இது குறித்து ஆவின் அதிகாரிகளுக்கு நந்தனத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது. அதேபோல், ஆவின் பால் முகவர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு வழங்க திட்டமிடப் பட்டுள்ளது. இதுகுறித்து வங்கிகளிடம் கருத்து கேட்கப்பட உள்ளது. முதல் கட்டமாக, சென்னையில் உள்ள பால் முகவர்களை அழைத்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது.