districts

img

கோமுகி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

கள்ளக்குறிச்சி,அக். 7-. கோமுகி அணையிலிருந்து பாச னத்திற்காக சனிக்கிழமை (அக்,7)    பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தண்ணீர் திறந்து விட்டார். மாவட்ட ஆட்சித் தலைவர் ஷ்ரவன்குமார். சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன்.வசந்தம் கார்த்திகேயன். மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து  வைத்து அமைச்சர் பேசுகையில், கோமுகி நதி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இத்தண்ணீர் திறப்பினால் பழைய பாசனத்தில் 5.860 ஏக்கர் பரப்பளவு நிலம்.புதிய பாசனத்தில் 5.000 ஏக்கர் பரப்பளவு நிலம் என மொத்தம் 10.860 ஏக்கர் பரப்பளவு நிலம் பாசன வசதி பெறும். பழைய பாசனத்திற்கு 60 கன அடி வீதமும். புதிய பாசனத்திற்கு 50 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது. 22.10.23 முதல் 5.12.23 வரை 45 நாட்களில் பழைய பாசன வாய்க்காலில் 120 கன அடியும்.புதிய பாசனவாய்ப்பாலில் 100 கன அடியும் தண்ணீர் விடப்படும்.  அணையின் மொத்தம் நீர் மட்டம் 46 அடியாகும். அணையின் மொத்த கொள்ளளவு 560.96 மி.க.அடியாகும் இவணை யிலிருந்து தற்போது தண்ணீர் திறப்பதன் மூலம் பழைய பாசன பரப்பில் 7 கிராமங்களும்.புதிய பாசன பரப்பில் 33 கிராமங்களும் என சுமார் 40க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பயனடை வார்கள் என்று அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ்.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வ ராணி.மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.