தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் காலை உணவு திட்டத்தையும் சத்துணவு ஊழியர்கள் மூலம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்டச் செயலாளர் கல்யாண சுந்தரம், தலைவர் சந்திரன், துணைத் தலைவர்கள் மணி, ராதா, செயற்குழு உறுப்பினர் ஜெகதாம்பிகா, முன்னாள் செயலாளர் நடராஜன், மாவட்ட துணை செயலாளர் சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.