சென்னை, ஜூன்.24-
அகில இந்திய அள வில் சுமர் 2500-க்கும் மேற்பட்ட மாண- மாணவி யர்கள் பங்கேற்ற 4-வது சர்வேதச அபாகஸ் அடிப்படையிலான எண்கணித மற்றும் திறன் மேம்பாட்டுப் போட்டி சென்னை நந்தம் பாக்கம் வர்த்தக மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தியன் அபாகஸ் நிறு வனம் நடத்திய இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவியர்க ளுக்கு பரிசு மற்றும் கோப்பைகளும் வழங்கப் பட்டது.
சென்னை மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகள் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த ஓர் ஆண்டுகளுக்கு மேலாக அபாகஸ் நிறு வனம் மாணவ, மாணவி யர்களுக்கு இலவசமாக கணித பாடத்தில் அவர்க ளின் அறிவு திறனை மேம்படுத்தும் விதமாக பயிற்சிகளை அளித்து வரு கிறது என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பஷீர் அகமது கூறினார்.