திருவண்ணாமலை, நவ.8- திருவண்ணாமலை எஸ்.கே.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரத சாரணர், சாரணியர் இயக்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு எஸ்.கே.பி.கல்வி குழுமத்தின் தலைவர் கு.கருணாநிதி தலைமை வகித்தார். கல்விக் குழுமத்தின் இணை செயலாளர் கே.வி. அரங்கசாமி மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி ஆர்.சக்தி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பேராசிரியர்கள், மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். பேராசிரியர் இராம காவிய விழாவை ஒருங்கிணைத்தார். கல்லூரி முதல்வர் எஸ்.வெற்றிவேல், மக்கள் தொடர்பு அலுவலர் சையத் ஜ`ஹிருத்தின் கலந்துகொண்டார்.