districts

img

ஏற்றத்தாழ்வை களைந்திட தூய்மை பணியாளர்கள் அரக்கோணத்தில் தர்ணா

ராணிப்பேட்டை, ஜூன் 29-

    தூய்மை பணியாளர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் கூடுதல் பணி சுமையை களைந்திட வலியுறுத்தி அரக்கோணம் நகராட்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு தர்ணா நடைபெற்றது.

    ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகராட்சியில் நிரந்தர தூய்மை பணியாளர்கள்  சுமார் 100 பேர், தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சுமார் 150 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்களில் நிரந்தர பணியாளர்கள் மழை நீர் கால்வாய் சுத்தம் செய்தல், ஒப்பந்த பணி யாளர்கள் வீடுதோறும் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை சேகரித்து வருதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வரு கின்றனர்.  

     நிரந்தர பணியாளர்களுக்கு மட்டும் நாள்தோறும் பணிச்சுமை அதிகரித்து பணிகளை மாற்றி மாற்றி வழங்கியும் ஒப்பந்த பணியாளர்களுக்கு கூடுதல் பணி கள் ஏதும் வழங்காமல் நகராட்சி அதிகாரி கள் ஏற்றத்தாழ்வு பாரபட்சம் காட்டி வருவ தாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணி யாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தின்போது சிஐடியு துப்புரவு சங்க மாவட்டத் தலைவர் எபிஎம். சீனிவாசன் தலைமையில் நகராட்சி தலை வர் லட்சுமி பாரி, நகராட்சி சுகாதார அலு வலர் மோகன் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதனை பெற்றுக் கொண்டு, உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.