districts

img

சனாதனத்துக்கு நேர் எதிரானது சன்மார்க்கம் ஆளுநர் ரவிக்கு கடும் கண்டனம்

    சனாதனத்துக்கு நேர் எதிரானது சன்மார்க்கம் என்றும் வள்ள லாரின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் ஆளுநர் பேசியதற்கு சன்மார்க்க அன்பர்களும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரி வித்துள்ளனர்.

     கடலூர் மாவட்டம், வடலூரில் நடை பெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “வள்ளலார் சனாதனத்தின் உச்சம் என்றும் பல்வேறு கருத்துக்களை திணித்தார். இந்த பேச்சுக்கு கடும் கண்டத்தை தெரிவித்திருக்கும் சன்மார்க்க அன்பர்கள்,“ சாதி, சமய பேதமின்றி உருவ வழிபாடுன்றி மனிதர்கள் அனைவரும் சமம் என போதித்தவர் வள்ளலார். ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என சன்மார்க்க நெறிமுறைகளை கூறியது மட்டுமல்லாமல், சனாதனத்திற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டு வாழ்ந்தவர்.

    வள்ளலாரின் போதனைகளை பின்பற்றி  சன்மார்க்கம் இயங்கி வரும் நிலையில், மதவாதமும் பிரிவின வாதமும், சாதி வேறுபாடும் கொண்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பின்பலத்துடன் இயங்கக்கூடிய ஆளுநர் ரவி சனாதனத்தை சன்மார்க்கத்துடன் இணைக்கும் முயற்சியாக  வரலாற்றை திருத்தி தேவையற்ற கருத்துக்களை கூறி சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறார். ஆளுநர் தனது பேச்சை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளனர்.

     வடலூரை சேர்ந்த புலவர் கோவி.பால முருகு, “ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் மனி தனைக் கடித்த கதையாக ‘சாதியும் மதமும், சமயமும் பொய்யென ஆதியில் உரைத்த அருட்பெருஞ்ஜோதி’என்றும் ‘சாதியிலே மதங்களிலே சமய நெறி களிலே சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே ஆதியிலே அபி மானித் தலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே’ என்று பாடியவர் வள்ளலார்.  

     வடலூரில் சத்திய ஞானசபையையும், சத்திய தருமச்சாலையையும் நிறுவி பசித்தோர்க்கு உணவும், ஆன்மீகத்தில் சன்மார்க்கத்தையும் தன் வாழ்நாள் முழுவதும் பரப்பிவந்தார். இந்த  மண்ணில், மனிதநேயமற்ற மதவெறிக் கும்பலாகிய பாஜக சங்பரிவார் வள்ளலாருக்குக் காவிச் சாயத்தைப் பூசவும், இந்துமத அடையாளமாக வள்ள லாரை மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டி ருக்கிறது.  

    ஆர்எஸ்எஸ்சின் ஊதுகுழலான ஆளுநர் ஆர்.என்.ரவி, வள்ளலாரின் கொள்கையைச் சனாதனத்தோடு இணைத்துப் பேசி தன் அறியாமையை வெளிப்படுத்தியிருக்கிறார். சனா தனத்தின் ஆணி வேரையே பிடிங்கி எறிந்த வள்ளலாரை சனாதன வாதியாக ஆளுநர்   ஆர்.என்.ரவி பேசியிருப்பது சன்மார்க்கத்தைப் புரிந்து கொள்ளாத அரைவேக்காட்டுப் பேச்சு.

    சன்மார்க்க நெறிமுறைகளை பின்பற்றும் பார்த்திபன் வள்ளல் பெரு மான் சாதி, மதம், பேதம் அன்று கொள்கையோடு வாழ்ந்தவர். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என வாழ்ந்தவர். எனவே, வடலூர் மக்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டில் இருக்கின்ற லட்சக்கணக்கான வள்ள லார் பக்தர்களாகிய சன்மார்க்க சங்கத்தி னரிடையே ஆளுநர் பேச்சு கடுமையான எதிர்ப்பையும், மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

     சமூக ஆர்வலர் பாலு, “ஐந்து திரு முறைகளுக்கு அடுத்து ஆறாவது திரு முறையாக அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்  ஜோதி என சாதியும் சமயமும் பொய்யென உணர்ந்தேன் என்ற கொள்கையாக வாழ்ந்தவர். வடலூர் சத்தியஞான சபையில் கடந்த ஆண்டு  சபை மைதானத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அதிகாலையில் பயிற்சி நடத்தி னர். அதற்கு வள்ளலார் மண்ணில் ஆர்எஸ்எஸ் பயிற்சிக்கு இடமில்லை என கூறி அப்போது அப்பகுதியை சேர்ந்த மக்களும் சமூக ஆர்வலர்க ளும் இணைந்து அவர்களை விரட்டி அடித்ததை ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.

     இந்த நிலையில் வள்ளலாரை தரிசிக்க வந்த ஆளுநர் ரவி பேசுகையில் சனாதனத்தில் உச்ச நட்சத்திர வள்ளல் பெருமான் என கூறியிருப்பது பெரும் கண்டனத்திற்குரியது” என்றார்.

      சமூக ஆர்வலர் வழக்கறிஞர்  திரு மார்பன்,“ தமிழ்நாடு ஆளுநராக ரவி செயல்படாமல் ஆர்எஸ்எஸ், பாஜக கைக்கூலியாக செயல்பட்டு கொண்டு வருகிறார். சனாதனத்தை சன்மார்க்கத்துடன் இணைக்கும் முயற்சியக  வரலாற்றை திருத்தி தேவை யற்ற கருத்துக்களை கூறி சர்ச்சைகளை ஏற்படுத்தி வருவதாகவும், அவருடைய இந்த செயல் வன்மையாக கண்டிப்பதாகவும் கூறினார். சன்மார்க்க அன்பர்கள் ஆளுநர் தனது பேச்சை உடனடியாக திரும்பப் பெறவேண்டும்” என்றனர்.

      இதேபோல் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்த சமூக ஆர்வலர்கள், “வரலாற்றை முழுமையாக தெரிந்து கொள்ளாமல்,  வள்ளலாரின் நெறி முறைகளை அறியாமல் அவர் பிறந்த மண்ணிலேயே, வள்ளலார் சனா தனத்தின் உச்சமென கருத்து தெரி வித்திருப்பது வள்ளலாரின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் செயல் என்றும் தனது வாழ்நாள் முழுவதுமே சனாதானத்திற்கு எதிராக வாழ்ந்தவர் வள்ளலார் என்ற வரலாற்றை தெரியாமல் அரைவேக்காட்டுத் தனமாக ஆளுநர் ரவி பேசியிருப்பதாக” கடுமை யாக சாடினார்.