சென்னை, பிப். 27 - சாதிய அமைப்புகளை பாஜக கொம்புசீவி விடுவ தாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ் குற்றம்சாட்டி னார். பள்ளிக்கரணையில் நடைபெற்ற சாதிய ஆணவ படுகொலையை கண்டித் தும் இத்தகைய படுகொலை களை தடுக்க தனிச் சட்டம் இயற்ற கோரியும் செவ்வா யன்று (பிப்.27) தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் ஆணவப் படுகொலை வழக்கை விரைந்து முடிக்க வேண் டும், படுகொலை செய்யப் பட்ட பிரவீன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப் பட்டன. கே.சாமுவேல்ராஜ் இந்த போராட்டத்தில் பேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ், “சென்னை யில் ஆணவக்கொலை நிகழ்ந்துள்ளது. “சாதிய படு கொலை நிகழ்ந்தால், வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் படி, மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் பாதிக்கப்பட்டவர் வீட்டிற்கு செல்ல வேண்டும். இதனை அதிகாரிகள் செய்ய மறுப் பது ஏன்? பிரதமரே தன்னை சாதியோடு பிணைத்துக் கொள்கிறார். சாதிய அமைப்புகளை பாஜக கொம்பு சீவி விடுகிறது. இத்தகைய படுகொலை கள் நிகழ முக்கிய காரணமே காவல்துறைதான் என்று சென்னை உயர்நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. சாதி ஆதிக்க வெறியர்களிடம் தப்பித்தாலும் காவல்துறை யிடமிருந்து தப்பிக்க முடிய வில்லை. 90 விழுக்காடு ஆணவப் படுகொலைக்கு காவல்துறையும் காரணமாக உள்ளது. நிச்சயம் ஒருநாள் குற்றவாளிகள் அனை வரும் நீதிமன்றத்தில் கூண்டில் ஏற்றப்படுவார் கள்” என்றும் அவர் கூறி னார். பள்ளிக்கரணை வழக் கில் காவல்துறை முறை யாக வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை கைது செய்துள்ளது. இந்த வழக் கில் 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, 4 மாதத்திற்குள் முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். எஸ்.கே.மகேந்திரன் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சிறப்பு தலை வர் எஸ்.கே.மகேந்திரன் பேசுகையில், “ஆணவப் கொலையை தடுக்க சிறப்புச் சட்டம் கேட்டு 15 ஆண்டுகளாக போராடு கிறோம். சட்டமன்றத்திலும் சிபிஎம், விசிக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தனிச்சட்டம் இல்லாததால் பொதுவான நீதிமன்றத் தில்தான் வழக்கு விசாரிக் கப்படும். நீதி கிடைக்க நீண்டகாலம் ஆகும். சிறப்பு சட்டம் இருந்தால் குறிப் பிட்ட காலத்திற்குள் வழக்கு முடித்து, குற்ற வாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் என்றார். வாலிபர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னணியின் துணை பொதுச்செயலாளர் கே.சுவாமிநாதன், மாநிலச் செயலாளர் வேணி, மாவட்ட தலைவர் ச.லெனின், செயலாளர் கே.மணிகண் டன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முரு கன், பகுதிச் செயலாளர் ப.ஜெயவேல், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு, விசிக மாவட்டச் செயலாளர் இளையா, ஒன்றிய செயலாளர் லாரன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.