சென்னை,ஜூலை 11-
உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் மங்கள் சிங். சமோசா வியாபாரி. இவர் கொருக்குப்பேட்டை, வ.உ.சி. நகர் ரயில் நிலையம் அருகே சென்றபோது மர்ம நபர்கள் அவரை வழிமறித்தனர். பின்னர் மங்கள் சிங்கை தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.1000த்தை பறித்து தப்பி சென்றனர். இதுதொடர்பாக வண்ணாரப்பேட்டையை சேர்ந்த நாகேந்திரன், திருவொற்றியூரை சேர்ந்த ஈஸ்வரன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.