districts

img

கள்ளக்குறிச்சி எஸ்.பியாக சமய் சிங் மீனா பொறுப்பேற்பு

கள்ளக்குறிச்சி,டிச.17- கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக (எஸ்.பி)  சமய் சிங் மீனா சனிக்கிழமையன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இவர் 6வது  காவல்துறை கண்காணிப்பாளராவார். சமய் சிங் மீனா பொறுப்பேற்றுக் கொண்டு கோப்புகளில் கையொப்ப மிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும், மாவட்டம் முழுவதும் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் 24 மணி நேரமும் இயங்கும், மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த தேவையான நடவடிக்கை எனவும் தெரிவித்தார்.