அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஆலந்தூரில் நங்கநல்லூர் கிளை சார்பில் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது. சிறுவர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு மாவட்டக்குழு உறுப்பினர் ஹேமா தலைமை தாங்கினார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ம.சித்ரகலா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.