திருவள்ளூர், ஜூன் 2-
திருவள்ளூர் பொன்னேரி திருவேங்கட புரத்தில் தனியாருக்கு சொந்தமான செயின்ட் ஜோம்ஸ் தனியார் பள்ளி உள்ளது. வியாழனன்று (ஜூன் 1) மாலை எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஏ.கலாம் இருசக்கர வாகனத்தில் அந்த பள்ளியை கடந்து செல்லும் போது, பேனர் அவர் மீது விழுந்தது. இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் வலது காலில் காயத்துடன் உயிர் தப்பினார்.
பொன்னேரி நகராட்சி முழுவதும் உள்ள தெருக்களிலும், முக்கிய வீதிகளிலும் தனியார் பள்ளிகள், தனிநபர்கள் விளம்பரத்திற்காக அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப் படுகிறது. இது பொது மக்களுக்கு பெரும் அச்சுறுத்துளாக உள்ளது. இதனை காவல்துறையினர் கண்டறிந்து உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர்.