districts

img

எஸ். எரிப்பாளையத்தை தனி ஊராட்சி மன்றமாக அறிவிக்க கோரி போராட்டம்

கடலூர், ஜன.3- எஸ்.ஏரிப்பாளையம் கிராமத்தை தனி ஊராட்சி மன்றமாக அறிவிக்க கோரி கிராம மக்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் உள்ள எஸ்.ஏரிப்பாளையம் கிராமத்தை இரண்டாகப் பிரித்து சிறு வத்தூர் ஊராட்சி மன்றத்தில் ஒரு பகுதி கிராமத்தையும், சேமகோட்டை ஊராட்சி மன்றத்தில் ஒரு பகுதி கிராமத்தையும் சேர்த்து வைத்துள்ளனர். ஒரு கிராமத்தை இரண்டு பிரித்து உள்ளதால் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் அவதியடைந்து வரு கின்றனர். அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக இரண்டு பஞ்சாயத்தை அணுகி கேட்கும் நிலை உள்ளது. எனவே, எஸ். எரிப்பாளையத்தை தனி ஊராட்சி மன்றமாக அறிவிக்க வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் சார்பில் உண்ணா நிலைப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். திருஅரசு, மாவட்ட குழு உறுப்பினர்கள் டி.கிருஷ்ணன், வட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.வினோத்குமார், ஏ.பன்னீர்,  வி.பூர்வசந்திரன்,  பி.குமரகுரு பரன், சின்ன சேமக்கோட்டை கிளை செயலாளர் செல்வராஜ், ஏரி பாளையம்  சண்முகம் பிரகாஷ்  உள்ளிட்ட பங்கேற்று வாழ்த்து பேசினர்.