districts

img

புதுவையின் பாரம்பரிய பஞ்சாலைகளின் நிலத்தை விற்க துடிக்கும் ஆட்சியாளர்கள்!

புதுச்சேரி யூனியன் பிரதேசம் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் 250 ஆண்டுகளுக்கு மேல் அடிமையாக இருந்தது. அன்றைக் கும் புதுச்சேரியின் பாரம்பரிய தொழில்கள் என்றால் அது விவ சாயமும், நெசவும் தான். நெசவாளர்கள் அதிகம் இருந்ததால் சுதேசி, பாரதி, ஏ.எப்.டி பஞ்சாலைகள் தொடங்கப்பட்டன. ஆடைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வந்தனர். புதுவை மக்களை அடக்கி ஒடுக்கிய பிரெஞ்சு அரசை எதிர்த்து, இந்த பஞ்சாலை தொழி லாளர்கள் வீரம் செறிந்த விடுதலை போராட்டத்தை நடத்தினர். அத்தகைய பஞ்சாலைகள் பாது காக்க தவறிய இன்றைய ஆட்சி யாளர்கள், அந்த இடத்தை விற்பனை செய்வதில் குறியாக உள்ளனர். உலக வர்த்தக மையம் புதுச்சேரி வரலாற்றில் மக்களின் வாழ்வியல், பொருளியல் மற்றும் பண்பாட்டின் பின்னிப் பிணைந்தது பஞ்சாலை தொழில்களாகும். இத்தகைய பின்னணியில் சுதேசி, பாரதி பஞ்சாலைகளின் நிலத்தை உலக வர்த்தக அமைப்புக்கு அலு வலகம் அமைக்க 22 ஏக்கரை ஒதுக்குவதாக என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போராடும் சிஐடியு புதுச்சேரியின் பொருளாதா ரத்திற்கு முக்கிய பங்காற்றிய பஞ்சாலைகள் புனரமைத்து புதி தாக ஜவுளி பூங்கா அமைத்தால் புதிய வேலைவாய்ப்புகளை உரு வாக்க முடியும். இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்பதால் சிஐடியு தொடர்ந்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது. 

ஆனால், ஆலைகளையும் தொழிலாளர்களையும் பாதுகாக்க முன்வர வேண்டிய ஆட்சியாளர்கள் அதை செய்ய முன்வரவில்லை. இது குறித்து சிஐடியு மில் தொழி லாளர் சங்கத்தின் தலைவர் ஜெ. குணசேகரன் கூறுகையில்,“ உலக வர்த்தக மையத்தின் அதிகாரிகள் புதுச்சேரி தொழில்துறை அமைச்சர் மற்றும் தொழில்துறை இயக்குநரை கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் சந்தித்தனர். அப்போது, உலக வர்த்தக மையத்தின் கிளை அலுவ லகம் அமைக்க நிலம் கேட்டுள்ள னர். குறிப்பாக, நீண்ட ஆண்டுகளாக திறக்கப்படாமல் மூடியே கிடக்கும் சுதேசி ஆலைக்குள் 22 ஏக்கர் நிலத்தை கேட்டுள்ளனர். இதை பரிசீலிப்பதாக அமைச்சர் தெரி வித்திருப்பது வேதனை யளிக்கிறது”என்றார். ஏகாதிபத்தியம் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்யும் உலக அமைப்புக்கு புதுச்சேரி மாநிலத்தின் வரலாற்று அடையாளமான பஞ்சாலை நிலத்தை வழங்கக் கூடாது” என்றும் வலியுறுத்தினார்.

தியாகிகள் நினைவு தூண்!

சிஐடியு மில் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர். ஆவணியப்பன் கூறுகையில், “பஞ்சாலைகளை பாதுகாக்க கோரி கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 30 தியாகிகள் தினத்தன்று  கிராமங்களை நோக்கி சிஐடியு நடை பயணம் மேற்கொண்டது. அன்றைய தினம் சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளாகும். எதிர்க்கட்சி தலைவராக இருந்து ஆர்.வி. ஜானகிராமன் சுதேசி மில் தொடர்பான தீர்மானத்தை முன்மொழிய முற்பட்டார். அப்போது சுதேசி, பாரதி மில்களை மாநில அரசே ஏற்று நடத்தும் என்று அன்றைக்கு  முதல்வராக இருந்த ரங்கசாமி தெரிவித்தார். மேலும், தியாகிகள் நினைவு தூண் எழுப்பப்படும் என்றும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைமை யிலான ஒன்றிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பஞ்சாலைகள் மாநில அரசிடம் ஒப்படைப்பது. மாநில அரசின் கட்டுபாட்டிற்கு வந்தும், போதிய நிதி உதவி செய்யவில்லை. பிரதம மந்திரி மித்ரா திட்டத்தின் கீழ், பஞ்சாலைகள் உள்ள இடத்தில் ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கான திட்ட வரைவை விரைந்து ஒன்றிய அரசுக்கு மாநில அரசு அனுப்பி வைக்க வேண்டும். நமது மாநிலத்தின் வரலாற்று பாரம்பரியத்தை பாதுகாத்திடும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளதால் தியாகிகளுக்கு நினைவு தூண் உடனடியாக அமைக்க வேண்டும்” என்றார். என்ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு, ஒன்றிய அரசி டம் இருந்து நிதியை பெற்று பஞ்சாலைகள் புனரமைத்து மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பது அனைவரது விருப்பமாகும்.

-இரா. முருகன்