districts

img

ஆர்எஸ்எஸ் ஊர்வலம்: காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு

விழுப்புரம்,நவ.19- திண்டிவனத்தில் திங்கள்கிழமை நடக்கவுள்ள ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் சில பகுதிகளில் திங்களன்று  ஆர்எஸ்எஸ்  ஊர்வலம் நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் திண்டிவனம் செஞ்சி ரோட்டில் ஆரம்பித்து, திண்டிவனம் நேருவீதி, வேதங்கர் வீதி, ஆர் எஸ் பிள்ளை வீதி,பெருமாள் கோவில் வீதி போன்ற முக்கிய வீதி வழியாக வந்து காந்தி சிலை அருகே ஊர்வலம் முடிவடைகிறது. ஊர்வலம் செல்லும் நேரு வீதி, காந்தி சிலை, போன்ற 23 இடங்களில் தற்காலிகமாக கேமிராக்களை அமைத்து போலீசார் விடிய விடிய தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டிவனத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக போலீசார் வட்டாரத்தில் தெரிவித்து வருகின்றனர். ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தால்  பலமுறை மதக்கலவரம் நடந்துள்ளதால் திண்டிவனத்தில் கிறிஸ்தவ தேவாலயம், மசூதி, திராவிட கழக அலுவலகம் ஆகிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.