districts

img

இரும்பு கழிவு ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ. 25 லட்சம் மோசடி: பாஜக பிரமுகர் கைது

அம்பத்தூர், டிச. 2- திருப்பெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இரும்பு கழிவு ஒப்பந்தம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ 25 லட்சம் மோசடி செய்த பாஜக பிரமுகர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை வானகரம் பகுதியை சேர்ந்த வர் வினோத்குமார் (48). இவர் தனியார் தொழிற்சாலைகளில் இருந்து இரும்பு கழிவு பொருட்களை மொத்தமாக எடுத்து விற்பனை செய்து வருகிறார். அவரிடம் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சுகுமாறன் (33) என்பவர் அறிமுகமாகி, திருப்பெரும்புதூர் அருகே காட்ரம்பாக்கம் ஊராட்சியில் எனது நண்பர் ஜானகிராமன் (50) என்பவர் பாஜகவில் உள்ளார். அவ ருக்கு அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகள் நன்கு அறிமுகம். இதனால் தொழிற்சாலையில் உள்ள இரும்புக் கழிவுகளை மிகவும் குறைந்த விலைக்கு எடுத்துக் கொடுப்பார் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதை உண்மை என நம்பிய வினோத் பாஜக பிரமுகர்‌ ஜானகிராமனிடம் ரூ. 25 லட்சம் கொடுத்து இரும்பு கழிவுகள் ஒப்பந்தம் எடுத்து கொடுக்குமாறு தெரிவித்துள்ளார்.   ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட ஜானகிராமன் ஒப்பந்தம் எடுத்துக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதையடுத்து வினோத் தான் அளித்த‌ பணத்தை திருப்பி கொடுக்கும்படி ஜானகிராமனிடம் கேட்டுள்ளார். ஆனால் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதுகுறித்து வினோத்குமார் மதுர வாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறை யினர் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஜானகிராமன் (50), செங்கல்பட்டு மேல்ரோசபுரம் சின்ன செங்குன்றம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சுகுமாறன் (33) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதில் ஜானகிராமன் பாஜக காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி பொதுச்செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.