districts

img

புதுவை விவசாயிகளுக்கு ரூ. 5 ஆயிரம் மானியம் முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

புதுச்சேரி,ஜன.29- புதுச்சேரியில் 2023-24 ஆண்டு சொர்ண வாரி பருவத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். புதுச்சேரியில் வேளாண் துறை சொர்ண வாரி பருவத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியத்தில் இடு பொருட்கள் வழங்குவதற்கு பதிலாக உற்பத்தி மானியம் வழங்கப்படுகிறது.  அதன்படி, 2023-24 ஆம் ஆண்டு சொர்ண வாரி பருவத்தில் நெல் சாகுபடி செய்த விவ சாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 5,000 வீதம் 2,417 விவசாயிகளுக்கு 3,845.05 ஏக்க ருக்கு 1,92,25,250- புதுச்சேரி பொதுப்பிரிவு உழவர்களுக்கு உற்பத்தி மானியம் அவர்க ளது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.  இதற்கான தொடக்க விழா திங்க ளன்று (ஜன.29) சட்டமன்றத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நடை பெற்றது. முதல்வர் ரங்கசாமி  பயனாளி களுக்கு காசோலைகளை வழங்கினார். இந்த இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர்  செல்வம், வேளாண்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் மற்றும் வேளாண் துறை இயக்குனர் வசந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.