districts

img

விபத்தில் உயிரிழந்த நடத்துநருக்கு ரூ 42 லட்சம் இழப்பீடு

காஞ்சிபுரம், டிச. 9 - காஞ்சிபுரத்தில் மக்கள் நீதிமன்றத்தில் விபத்து வழக்கில் உயிரிழந்த பேருந்து நடத்துநருக்கு ரூ.42லட்சம் இழப்பீட்டுத் தொகையாக மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட அவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து(57) இவர் சென்னை போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நடத்துநராக பணிபுரிந்து வந்தார். இவர்  தனது தாயாரின் நினைவாக அனாதை இல்லத்துக்குச் சென்று உணவு வழங்கி  விட்டு இருசக்கர வாகனத்தில் வாலாஜாபாத்  அரசு மருத்துவமனை அருகே வந்து கொண்டிருந்த போது பின்புறம் மணற்கற்கள் ஏற்றி வந்த லாரி இவர் மீது மோதியதில் உயிரிழந்தார். கடந்த 23.10.22 அன்று  நடந்த இச்சம்பவம் தொடர்பாக வாலாஜாபாத் காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தனர். இவ்விபத்து வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விபத்தில்  உயிரிழந்த மாரிமுத்துவின் மனைவி ரோஸ் மேரி தனக்கு ரூ.1.50கோடி இழப்பீட்டுத் தொகையாக வழங்க  வேண்டுமென்று வழக்கு தாக்கல் செய்தார்.  மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனம் சார்பில் ரூ.42 லட்சம் இழப்பீட்டுத்  தொகையாக வழங்குவது எனச் சமரசம்  செய்யப்பட்டது. இழப்பீட்டுத் தொகை யினை மாரிமுத்துவின் குடும்பத்தினரிடம் மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் வழங்கி னார். இவ்வழக்கில் இருசக்கர வாகனத்தின்  பின்னால் அமர்ந்திருந்து விபத்துக்குள்ளான தசரதனுக்கும் காயம் ஏற்பட்டதால் அவருக்கு ரூ.2.25லட்சமும் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டது. வழக்குத் தொடுக்கப்பட்ட ஒரே ஆண்டில் மனுதாரரின் வழக்கு மக்கள் நீதிமன்றத்தின் மூலமாகச் சமரசம் செய்து வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.