ராணிப்பேட்டை, மார்ச் 7- அரக்கோணம் அருகே உள்ள சோளிங்கரில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இதில் 1,305 படிகள் உள்ளது. ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்ய செல்கின்றனர். இந்த நிலை யில், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மலை மீது ஏறிச்சென்று தரிசிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். அவர்கள் எளிதில் மலைக்கு சென்று தரிசிக்கும் வகையில் ரோப்கார் அமைத்து தர வேண் டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அதன்பேரில் தமிழக அரசு ரூ.9.50 கோடி மதிப்பில் ரோப்கார் அமைக்கும் பணியை தொடங்கி யது. இப்பணிகள் முழுவதுமாக முடிந்து கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு ரோப்கார் சோதனை ஓட்டமும் நடந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் கள் பி.கே. சேகர்பாபு, ஆர்.காந்தி ஆகியோர் ரோப்கார் அமை விடத்தில் ஆய்வு செய்தனர். இந்நிலையில் லட்சுமி நரசிம்மர் மலைக் கோவிலின் ரோப்கார் சேவையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளியன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.