சென்னை, நவ. 25- பட்டியல் அளித்த வியாபாரிகள் அனை வருக்கும் உணவு வண்டிகள் வழங்க வலி யுறுத்தி சென்னை மாவட்ட சாலையோர சிறுகடை விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் மண்டல அதிகாரி சேகரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், உணவு மற்றும் சிற்றுண்டி விற்பனை செய்யும் சாலையோர சிறுகடை வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி வழங்குவதாக தாங்கள் அறிவித்தபடி 20.11.2024 அன்று எம்கேபி நகர் வெஸ்ட் அவென்யூவில் உணவு சம்பந்தமான வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் 18 பேரின் பட்டியல் அளித்தோம். அதனடிப்படையில் 21.11.2024 அன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எம்கேபி நகர் வெஸ்ட் அவென்யூ பகுதியில் 3 வியாபாரி களுக்கு மட்டும் வண்டிகளை வழங்கினர். மீதமுள்ள 15 வியாபாரிகளுக்கு இன்னும் வண்டி வழங்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் கேட்டபோது, எங்களுக்கு மேல் இடத்தில் இருந்து உத்தரவு வந்தால் மட்டுமே வண்டிகள் வழங்குவோம் என்று கூறுகிறார்கள். மாநகராட்சியால் புதிய வண்டிகள் வழங்கப்படும் என்பதால், பழைய வண்டிகளை அப்புறப்படுத்தி விட்டார்கள். எனவே தாங்கள் தலையிட்டு மீதமுள்ள 15 பேருக்கும் வண்டிகள் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது. இம்மனுஅளிப்பு நிகழ்வில் மாவட்டச் செயலாளர் டி.வெங்கட், நகர விற்பனைக் குழ உறுப்பினர் ஜி.மோனிஷா, மாவட்டப் பொருளாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன் எம்.கே.பி. நகர் வெஸ்ட் அவென்யூ சங்கத்தின் நிர்வாகிகள் பி.முகமது காசிம், ஏ.நைனாமுகமது, ஆர்.ரகுநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.