districts

img

சவக்குழி போல் காட்சியளிக்கும் சாலைகள்:சிபிஎம் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, ஆக.28- சவக்குழி போல் காட்சியளிக்கும் சாலை களை போர்க்கால அடிப்படையில் சீர் செய்திட கோரி பாகூரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் திங்களன்று (ஆக. 28) நூதன போராட்டத்தில் பங்கேற்று முழக்கமிட்டனர். பாகூர் கமிட்டி செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் பிரபுராஜ் போராட்டத்தை துவக்கி வைத்தார். அகில இந்திய விவ சாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் பத்மநாபன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள் போராட்டத்தை   நிறைவு செய்து பேசினார்.  மாநிலக் குழு உறுப்பினர்கள் கலியன், இளவரசி உட்பட பலர் பேசினர். புதுச்சேரி மாநிலம், பாகூர் கொம்யூன்  பகுதிக்குட்பட்ட பரிக்கல் பட்டு, ஆராய்ச்சி குப்பம், குருவிநத்தம் சோரியங்குப்பம், மதிக்கிருஷ்ணாபுரம், முள்ளோடை புதுகுப்பம், மூர்த்தி குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குண்டும் குழியுமான சாலைகளை போர்க் கால அடிப்படையில் சீர் செய்ய வேண்டும்.  பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தி அனைத்து சிகிச்சைகள் செய்யக்கூடிய மருத்துவ மனையாக மாற்ற வேண்டும். அடிக்கடி ஏற்படும் மின்தடையை சீர்படுத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.