districts

img

வணிக வளாகங்களின் அருகாமையில் பொது வாகனங்களை நிறுத்த அனுமதித்திடுக!

சென்னை, பிப். 5 - வணிக வளாகங்கள் அருகாமையில் பொது போக்குவரத்து வாகனங்களை நிறுத்த அனுமதி அளிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட முதல் மாநாடு ஞாயிறன்று (பிப்.4) சிந்தாதரிப்பேட்டையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், விபத்தில் தொடர்புடைய ஓட்டுநர்களுக்கு 10 வருட சிறையும், 7 லட்சம் அபராதமும் விதிக்கும் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) சட்டத்தின் பிரிவின் 106 (2)ஐ ஒன்றிய அரசு திரும்ப பெற  வேண்டும், ஆன்லைன் அபராதம், சாலை வரி உயர்வை மாநில அரசு திரும்ப பெற  வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் எஸ்.கே.முருகேஷ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சி.அமர் சிஐடியு கொடியை  ஏற்றினார். துணைச் செயலாளர் ஆர்.ராஜ்மோகன் வரவேற்க, துணைச் செயலாளர்  அ.முகமது ஹனீப் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிர மணியம் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட பொதுச் செயலாளர் எம்.உதயகுமார் வேலை அறிக்கையையும், பொருளாளர் எம்.முரளி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.தயாளன், சென்னை பெருநகர மோட்டார் வாகன தொழிலாளர் சங்க துணைப் பொதுச் செயலாளர் ஏ.ராயப்பன், சென்னை மாநகர் மோட்டார் வாகன  தொழிலாளர் சங்க பொருளாளர் ஏ.எல்.கண்ணன் ஆகி யோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர்.  சாலை  போக்குவரத்து சம்மேளன மாநில பொதுச்செயலாளர் வி.குப்புசாமி நிறைவுரை யற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் தி.சிவகுமார் நன்றி கூறினார். நிர்வாகிகள் மத்திய சென்னை மாவட்ட கவுரவ தலைவராக எம்.சந்திரன்,  தலைவராக எஸ்.கே.முருகேஷ், பொதுச் செயலாளராக எம்.உதயகுமார், பொருளா ளராக எம்.முரளி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.