districts

img

அல்லேரி மலை கிராமத்திற்கு சாலை வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வேலூர், ஜூலை 27-

       வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட அல்லேரி மலை யிலுள்ள அத்திமரத்து கொல்லை மற்றும் ஆட்டுகொந்தரை மலை கிராமங்களில் ஒன்றரை வயது சிறுமி தனுஷ் மற்றும் சங்கர் ஆகியோர் பாம்பு கடித்து உயிரி ழந்தனர். முறையான சாலை வசதி இருந்திருந்தால் உயிரிழப்பை தடுத்திருக்க லாம் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     இதையடுத்து, முதற்கட்டமாக அல்லேரி மலை பகுதியில் சாலை அமைப்பதற்காக வனத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட 3.2 ஹெக்டேர் நிலத்திற்கு 6.4 ஹெக்டேர் மாற்று இடத்தை வருவாய் துறை மூலம் அல்லேரி மலையில் வனத்துறைக்கு அளவீடு செய்து கொடுக்கப்பட்டது.

    வருவாய் துறை சார்பில் வழங்கப்பட்ட இடம் பெரிய பாறைகள் மற்றும் ஓடைகளும் இருப்பதால் அதை பயன்படுத்த முடி யாது என வனத்துறையினர் தெரிவித்த தோடு, பேரணாம்பட்டு அல்லது வேலூர் சரகத்திற்குட்பட்ட எல்லையில் சதுரமாக உள்ள நிலத்தை வழங்க வேண்டும் எனக் கூறினார். இதையடுத்து வனத்துறையினருக்கு வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் இடம் வழங்க, வருவாய்த்துறையினர் தேர்வு செய்துள்ளனர்.

     இந்நிலையில், வியாழனன்று (ஜூலை 27) வனத்துறைக்கு இடம் அளந்து வழங்கப்பட்ட நிலையில், அல்லேரி மலையில் சாலை அமைக்கப்பட உள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் நடந்து சென்று ஆய்வு செய்தார்.

     வரதலம்பட்டு மலை கிராம அடி வாரத்தில் இருந்து, 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அல்லேரி மலை உச்சிக்கு ஆட்சியர் நடந்து சென்று, எந்த இடத்தில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.சாலையை அடித்து செல்லாத வகையில் மழை நீரை எவ்வாறு அப்புறப்படுத்துவது, வளைவுகளில் வாகனங்களை திரும்பும் அளவுக்கு இட வசதி உள்ளதா? என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

     இந்த ஆய்வின்போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரன், பீஞ்சமந்தை ஊராட்சி மன்ற தலைவர் ரேகா ஆனந்தன், துணை தலைவர் கம்சலா சுந்தரேசன், அல்லேரி கிராம நிர்வாக அலுவலர் கோபிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.