சென்னை, செப். 27 - வாரிய வீடுகளை விரைந்து கட்டிக் கொடுக்க கோரி, வள்ளீஸ்வரன் தோட்டம் மக்கள் புதனன்று (செப்.26) சாலை மறியலில் ஈடுபட்டனர். மயிலாப்பூர் பகுதி, வள்ளீஸ்வரன் தோட்டம், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடி யிருப்பு பகுதி உள்ளது. 40 ஆண்டு பழமையான வீடு களை இடித்துவிட்டு 2019ஆம் ஆண்டு சுமார் ரூ70 கோடி செலவில் புதிய அடுக்குமாடி வீடுகள் கட்டும் பணி தொடங்கியது. 18 மாதத்தில் முடிக்க வேண்டிய பணி 46 மாதங்களை கடந்தும் முடிக்கப்படாமல் உள்ளது. கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, வீடு களை வழங்க கோரி பய னாளிகள் கடந்த ஜனவரி மாதம் மறியலில் ஈடுபட்ட னர். அப்போது பேச்சு நடத்திய வாரிய அதிகாரி கள், ஏப்ரல் மாதம் பயனாளி களுக்கு வீடுகளை ஒப்படைப்பதாக எழுத்து பூர்வமாக உறுதி அளித்த னர். அதன்பிறகு 5 மாதங் களை கடந்தும் கட்டுமானப் பணிகள் முடிக்காமல் உள்ளனர். இதனை கண்டித்து, வள்ளீஸ்வரன் தோட்டம் குடியிருப்போர் கூட்ட மைப்பு சார்பில் இந்த மறியல் போராட்டம் நடை பெற்றது. அப்போது செய்தி யாளர்களிடம் பேசிய கூட்ட மைப்பின் செயலாளர் எஸ்.குமார், “அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பயனாளிகளுக்கு குடியிருப்புகளை வழங்க வேண்டும். 568 வீடுகளுக்கு பதிலாக 630 வீடுகள் கட்டப் பட்டுள்ளது. எஞ்சிய வீடு களை பயனாளிகளின் வாரிசுகளுக்கு குலுக்கல் முறையில் வழங்க வேண்டும். பயனாளிகள் வாரி யத்திற்கு ரூ1.43 லட்சம் பங்களிப்பு தொகையாக செலுத்த வேண்டும். கட்டு மான பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காத தால், மக்கள் வாடகை வீடு களில் வசித்து வருகின்ற னர். இதனை கருத்தில் கொண்டு, பங்களிப்புப் தொகையை குறைக்க வேண்டும்” என்றார். இதனைத் தொடர்ந்து பேச்சு நடத்திய வாரிய அதிகாரிகள், நவ.1-10ம் தேதிக்குள் பய னாளிகளுக்கு வீடுகளை ஒதுக்க குலுக்கல் நடத்தப் படும். நவ.15 அன்று வீடு கள் ஒப்படைக்கப்படும் என்று எழுத்துப்பூர்வமாக உறுதி யளித்தனர். இதனையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.