districts

img

கால்வாய் அடைப்பால் நோய் பரவும் அபாயம்

சென்னை, ஆக. 4-

       திருவொற்றியூர் வார்டு 4இல் கால்வாய் அடைப்பால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

      சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 1இல் என்யுஎல்எம் ஊழியர்கள், சாலை பராமரிப்பு ஊழியர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்கள் போதுமான அளவிற்கு இல்லை. 4ஆவது வார்டில் 198 கால்வாய்கள் உள்ளன. போது மான ஊழியர்கள் இல்லாததால் எர்ணாவூர் காந்தி நகர், மாகாளியம்மன் கோயில், எர்ணீஸ்வரன் நகர், மகாலட்சுமி நகர், கிரிஜா  நகர், முல்லை நகர், முருகப்பா நகர், ஜோதி  நகர், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது.  இதனால் கொசு அதிகமாக உற்பத்தியா வதோடு துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் சுகாதாரசீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதுகுறித்து மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் கூறுகையில், மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் இதுநாள் வரை கால்வாய் அடைப்பு சீரமைக் கப்படவில்லை. இதனால் மக்கள் மத்தியில் மாநகராட்சி மேல் அதிருப்தி நிலவுகிறது. எனவே போதுமான ஊழியர்களை நிய மித்து கால்வாய் அடைப்புகளை சீரமைக்க  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றார்.