சென்னை ராயபுரம் பகுதி 53 வது வட்டம், மிண்ட் ஐடிஐ வாயில் அருகில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தேக்கம் அடைந்துள்ளது. கடந்த 3 மாதங்களாகியும் எந்தவித பாதுகாப்பும், பராமரிப்பும் இன்றி அதிகாரிகளின் அலட்சியத்தால் கேட்பாரற்று கிடக்கிறது.மேலும் அதிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். கொசு உற்பத்தியின் மையக்குழியாக இருப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை உடனே சரிசெய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.