பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு, சுங்கக் கட்டண உயர்வை கண்டித்து புதனன்று (ஏப்.6) திருவல்லிக்கேணி அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு இணைந்து நடத்திய இந்தப் போராட்டத்திற்கு சிபிஎம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் கவிதா கஜேந்திரன் தலைமை தாங்கினார். மத்திய சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.ஆறுமுகம் மற்றும் எம்.பழனி (சிஐடியு), ஆர்.கபாலி, கு.ராமமூர்த்தி (ஆட்டோ சங்கம்) உள்ளிட்டோர் பேசினர்.