சென்னை, ஜன.21 சென்னையில் கடந்த சில நாட்களாக கொசு தொலை அதிகமாக உள்ளது. பகலில் கூட கொசுக்கள் துரத்துகி றது. இரவு நேரத்தில் அலை அலையாக பறந்து வந்து கடிப்பதால் தூக்கத்தையும் தொலைத்து பலரும் அவதிப்படுகிறார்கள். நகரில் பல இடங்களில் இன்னும் மழை தண்ணீர் தேங்கி கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்கிறது. மாநகராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொசு ஒழிப்பு பணியாளர்கள் 15 மண்டலங்களிலும் பணி யாற்றுகிறார்கள். அவர்க ளில் சுமார் 200 பேர் மட்டுமே கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மற்றவர் கள் கொரோனா பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். ஆனால் மாநகராட்சி அதி காரிகள் தரப்பில் கூறும் போது, தினமும் காலை 6 முதல் 7.30 மணி வரையி லும், மாலையில் 6 மணி முதல் 7.30 மணி வரையிலும் புகை அடிக்கும் பணி நடப்ப தாக கூறுகிறார்கள். வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்காதவாறு பார்த்து கொள்ளும்படி அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் திறந்த வெளிகளில் தண்ணீர் தேங்கி கிடப்பது பற்றி மாநகராட்சிக்கு பல முறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் சிலர் டெங்குவால் பாதிக் கப்பட்ட பிறகே மருந்து தெளிக்க வந்ததாக பாடி பகுதியை சேர்ந்தவர்கள் ஆதங்கப்படுகிறார்கள். கொசுக்களால் டெங்கு வேக மாக பரவி வருகிறது. இந்த ஆண்டில் கடந்த 20 நாட்க ளில் தமிழகம் முழுவதும் 863 பேர் டெங்குவால் பாதிக்கப் பட்டுள்ளனர். கடந்த ஆண்டு (2021) டெங்கு காய்ச்சலால் 6039 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 8 பேர் உயிர் இழந்தனர் என்பது குறிப்பிட த்தக்கது. மேலும் சிக்குன் குனியாவால் 150 பேரும், மலேரியாவால் 500 பேரும், எலி காய்ச்சலால் 1028 பேரும், தொற்று காய்ச்சல்க ளால் 2220 பேரும் பாதிக்கப் பட்டுள்ளார்கள்.