திருவண்ணாமலை, டிச.1- திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் பட்டியலின மக்களின் உரிமைக்கான கோரிக்கை சாசனம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச் செயலாளர் பி.செல்வன், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் அப்துல் காதர், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட நிர்வாகி கள் பலர் கலந்து கொண்ட னர்.