districts

img

நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப் படியை வழங்க வலியுறுத்தி ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப் படியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் வியாழனன்று (மே 26) திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய அரசு,  மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் ஜி. இராஜேந்திரன் தலைமை தாங்கினார்.  சங்கத்தின் நிர்வாகிகள் து.மகேந்திரன், பலராமன், நாராயணன், கே.கன்னியப்பன், கே.எஸ்.சம்மந்தம், ஓய்வூதியர் கூட்டமைப்பின் நிர்வாகி கோ.இளங்கோ, ஜெயபால் ஆகியோர் பேசினர்.