புதுச்சேரி பிப். 3- அண்ணாவின் நினைவு நாளையொட்டி, புதுச்சேரி ஒதியஞ்சாலை சந்திப்பில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அரசு சார்பில் சனிக்கிழமையன்று (பிப்.3) நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய் ஜெ. சரவணன் குமார், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.