districts

img

மார்க்ஸ் சிலைக்கு மரியாதை

மாமேதை கார்ல் மார்க்ஸின் 140 வது நினைவு தினத்தை ஒட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடலூர்  மாவட்ட குழு அலுவலகத்தில் உள்ள  காரல் மார்க்ஸ் சிலைக்கு மாவட்ட செயலாளர் கோ.மாதவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்   சாலைப் போக்குவரத்து சங்க மாநில பொதுச் செயலாளர் குப்புசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி. கருப்பையன், ஜே.ராஜேஷ் கண்ணன், புதுவை நகர செயலாளர் மதிவாணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் டி.பழனிவேல், எஸ்.கே. பக்கிரான், மாநகர குழு உறுப்பினர்கள் ஸ்டாலின், கருணாகரன், தமிழ்மணி, தேவநாதன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுந்தரமூர்த்தி, கலைவாணன், நீல நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.